Sunday, 8 May 2011

.....ரா....ரா ..ஜா......!!!!!!!!!!






 
"கல்யாணம்கிற பேர்ல எப்படிடா ஷங்கர் , முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு கூட படுக்க ரெடி ஆயுடுறீங்க .."

இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை ... கொஞ்சம் அதிர்ந்து போனேன்... இதே மாதிரி வேறு யாரவது கேட்டிருந்தால் .... நடப்பதே வேறு... ஆனால் கேட்டது ராஜா- வாயிற்றே.. .. அதிர்வில் கொஞ்சமும் சலனமற்று நின்றேன் ,,..

ராஜா....... அநேகமாக உங்கள் எல்லோருக்கும்  இது சிநேகமான பெயர்தான்... உங்கள் பக்கத்து  வீட்டிலோ , அண்ணனோ ,தம்பியோ .... உங்கள் வீட்டில் உங்களை அழைக்கப்படும் பெயராகவோ .....உங்கள் குடும்பம் சார்ந்த பெயராகவோ , குடும்பம் சாராத நட்பின் பெயராகவோ இருக்கலாம்.தேசிய விலங்கு, தேசிய பறவை மாதிரி ,... இந்தியாவெங்கும் அங்கீகரிக்க படாத தேசிய பெயர் ராஜா- வாகத்தான் இருக்கும் ... நீட்டி முழக்காமல் ... ஒரே வரியில் சொன்னால்...... இதோ இந்த வாழ்க்கை ராஜா கொடுத்தது... அப்படியிருக்கும் பட்சத்தில் என்னால் அவனை எதிர்த்து எதுவும் பேச முடியாது....

ராஜா --- எனக்கு டிப்ளோமா படிக்கும் காலங்களில்தான்   நன்கு பரிச்சயம்  ஆனான் ...... தினமும் பக்கத்து ஊருக்கு ரயிலில் பயணம்... ரயில் நிலையத்தில் இருந்து POLYTECHNIC ஒரு நான்கு கிலோமீட்டர் இருக்கும் ,... களைப்பு தெரியமால் நடக்க , நாங்கள் பேசி கொண்டே செல்வோம்..
நிறைய பேசுவான் ராஜா .... உலகத்தின் அத்தனை விஷயங்களையும் தன் விரல் நுனிக்குள் வைத்துக் கொள்ள ஆசைப்படுவான். 
திடீரென " உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ஷங்கர் " , நம்ம தமிழ்நாட்டு பிளேயர் ராபின் சிங்க்-க்கு தமிழ் தெரியாது என்பான் ,,, இதெல்லாம் எங்கு புடிப்பான் என்றும் தெரியாது ,,, எங்கு படிப்பான் என்றும் தெரியாது... ஆனால் அவன் பேச பேச நாம் கேட்டு கொண்டே இருக்கலாம்.  உனக்கு  சே குவாரா தெரியுமா ! என  புது புது விஷயங்களை சொல்லி கொண்டே இருப்பான்...

நான் , நேற்றைய பற்றிய சிந்தனையும் , நாளைய பற்றிய கவலையும் இல்லாத மனிதன்... ஆற்றில் விழும்  இலை மாதிரி...வாழ்க்கையை கால ஓட்டத்தின் போக்குக்கு விட்டுவிடுபவன்,,,, ஆனால் ,,, அவன் ...நேற்றை மறக்க கூடாது ... என்பான் .... நாம் நேற்றில் அடைந்த வலிகள் தான் .... சவாலான நாளையை சமாளிக்க உதவும் உந்து சக்தி... என்பான்... ஒரு VISION ஒரு MISSION இல்லாத  மனிதன் ... ஜடம் என்பான்,. அவன் மொழி புரியவில்லை என்றாலும் ,... புடிக்கும்.. வரலாறை படிப்பதில் ஆர்வம் காட்டுவான் ...  மறைந்தால் ஒரு வரலாறாக மறைய வேண்டும் என்பான்...கிட்டதட்ட சிவப்பு சிந்தனை காரன்... (அதாங்க கம்யூனிஸ்ட்) ...

கிளாஸ் ரூம்-ல்  , இன்னிக்கு கயல்விழி என்ன டிரஸ்-ல் வந்திருக்கு என எட்டி பார்த்தால் திட்டுவான்... இந்திரா மேடம் ... திரும்பி நின்று போர்டு-ல் எழுதும் போது... கொஞ்சம் கவனம் சிதறினாலும் ...பார்வை எங்கோ போகுது பார் என அதட்டுவான்... மனிதனுக்கு கட்டுபாடு  மிக முக்கியம் என்பான்.  அறந்தாங்கி சுபாவில் , அருமையான பிட்டு  படம் ஓடுதுடா என்றால் .... அந்த நேரத்தை செந்திலோடு " சன் கம்ப்யூட்டர்-ல் " செலவு செய் ... உபயோகமாக  போகும் என்பான்... ஜோதி பாசு ரூமுக்கு போனால் , பலான புக் படிக்கலாம் என்றால் ,, TYPE WRITTING போ , பின்னால் உதவும் .. என்பான்...

எனக்கும் , இவனுக்கும் ஒரே வயதுதான் ஆகிறது ,,,, பிறந்தது கூட ,. ஒரே வருடம் , ஒரே மாதம்... அப்படியிருக்க இவன் சிந்தனைகள் மட்டும் ஏன் இவ்ளோ முதிர்ச்சியாய் என பல தடவை ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்...  
16 வயதில் , 60 வயதுக்குரிய  பக்குவத்தில் நடந்து கொள்வான்.

கடைசியாய் , FIRST CLASS WITH HONOURS   என்று டிப்ளோமா வாங்கியபோது , இந்த பெருமையெல்லாம் ராஜாவுக்குதான் என்று தோன்றியது. 
இந்தளவுக்கு மொபைல் , இன்டர்நெட்... வளர்ச்சி அடையாத அந்த காலத்தில்(2000 ) , டிப்ளோமாவுக்கு பிறகு சக மாணவர்களை சந்திக்க முடியாமல் போனது....கொஞ்சம் நஞ்சம் இருந்த ரெங்கராஜன்  தொடர்பும் , பிறிதொரு நாளில் அறுந்து போனது...

காலபோக்கில் ,SURVIVAL என்ற கால்பந்து வீரன் , ஷங்கர் என்ற இந்த பந்தை , வேலை என்ற கோல் போஸ்ட்டை நோக்கி உதைக்க , பறந்து வந்து சென்னை என்ற கிரௌண்ட்-ல் விழுந்தேன்....சென்னை என்ற உலகம் பிரமாண்டமாய் என் முன் நின்றது,..கிட்டதட்ட எட்டு மாதம்  அலைச்சல் ,.... ம்ஹ்ஹூம் .... எங்கும் வேலை கிடைத்த பாடில்லை... எல்லாம் நம்ம அண்ணன் பின்லேடன் புண்ணியம்தாம்... அவர் TWIN TOWERS-க்கு  வைத்த குறி ,,.. எங்களை மாதிரி வேலை தேடி அலைபவர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கி விட... ரொம்பவும் வெறுத்து விரக்தியின் உச்சத்தின் இருந்த கால கட்டம் ... கடைசியாய் சௌகார்பேட்டை யில் ஒருவன்  வேலை தருகிறேன் ,,, ஆனால் செக்யூரிட்டி-க்கு உன் CERTIFICATES  வேணும் என்று கேட்க ...
CERTIFICATES - தானே இந்தா! எடுத்துக்க என்று .. என் 18 வருட கல்வி உழைப்பை அவனிடம் அளித்தேன்..(Employment Card   , ஜாதி சான்றிதழ், தமிழக தமிழாசிரியர் கழகம் நற்சான்றிதழ் உட்பட )...  விளைவு ,.,.,, அவன் திடீரென தன் முகம் மாற்றி வில்லனாக சிரித்தான்,, எஸ் ,,,, அதோ... அங்கேதான்..என்னுடைய 19 வருட வாழ்க்கை ,, ஒரு கணம் நின்று துடித்தது...

செந்தில்குமரன் நான் ரொம்ப அவரச பட்டு விட்டதாக வருந்தினான் , அவனின்  அறிவுரையின் பேரில்  certificates -ஐ திருப்பி கேட்டபோது ஒரு பதில் வந்தது ... 
"ஆஆ  அதுவா , நாங்க எங்க HEAD OFFICE - க்கு   அனுப்புச்சுட்டோம் ,,, ஒரு வருஷம் கழிச்சுதான் திரும்பி வரும் என்று... " ...

அவரசப்பட்டு விட்ட குற்ற உணர்வு மேலிட ,,, செய்வறியாது , சௌகார்பேட்-லிருந்து .. மெரினா பீச்சுக்கு  நடந்தே வந்தேன்...மொத்தமும் சூன்யமாகி விட்டது  வாழ்க்கை ... நடந்த களைப்பில் , எம் ஜி ஆர் சமாதி அருகிலிருந்த புல் தரையில் சரிந்து அமர்ந்தேன் ... வெயிலில் கடற்கரை வெறிச்சோடி இருந்தது...என் நிலைமை மாதிரி....

இது கமாவா ! இல்லை முற்றுப்புள்ளியா ! என எதுவும் புரியாமல்,
அழுகை கண்களிலும்  ,, தோற்ற உணர்வு நெஞ்சிலும் அடைக்க ,,... அப்படியே தூங்கிப்போனேன் .. திடீரென கண் விழித்து பார்த்த போது , கொஞ்சம் அதிர்ச்சி தான் ,, காரணம் ...  என்னை மாதிரி நூற்று கணக்கான மனிதர்கள் உறங்கி கொண்டிருந்தார்கள்.அந்த புல் தரையில் .. இத்தனை பேரும் நம்மை போல் வாழ்க்கை தொலைத்தவர்களா என பிரமித்தேன் ... வெறுங்கையோடு ஊருக்கு திரும்பி போக முடியாது... வீட்டில் என்ன சொல்வது... என வழி தெரியாமல் நின்ற போது... கடல் அன்னை , அலை என்ற தன் கைகளை காட்டி , பிரமாண்டமாய் அழைத்தது... வா நான் உனக்கு ஒரு நிரந்தர வழி சொல்கிறேன்  என்று  . போ என இடது காலும் ,, போகாதே என வலது காலும் மன்றாடின.. கடற்கரையில் மனிதர்கள் நடமாட்டம் தெரிய ஆரம்பித்திருந்தது  , கடற்கரை நோக்கி மெல்ல நடந்தேன் ... பசி களைப்பில் , மணலோடு மல்லுக்கட்டி நடக்க முடியாமல் ... தொப்பென்று ஓர் இடத்தில் உட்கார்ந்தேன் ...

திடீரென என் தோள் மீது ஒரு கை விழ , சுதாரித்து நிமிர்ந்த போது ... என் கண்களை என்னால்  நம்பவே முடிய வில்லை ... ஆம் ... ராஜா ,ராஜாவேதான் ... இவன் இங்கு என்ன செய்கிறான் ,, என்ன செய்வான் ,,, நம்மை போல வேலை தேடி அலைந்து கொண்டிருப்பான்...
அதே பிரகாசமான முகம் .... தாயை தொலைத்து விட்ட குழந்தை ,, திரும்ப தாயை காண நேர்ந்தால் ... அழுவதா ,,, சிரிப்பதா ,.,.. என குழப்பமான மனநிலையில்... வீறிட்டு அழுமே ... அப்படி ஒரு நிலைமை அன்று எனக்கும் ... கொஞ்ச நேரம் ஆறுதல் கூறியவன் ...
இங்கே எல்லா பிரச்சினைக்கும் ஒரு SOLUTION   இருக்கு ஷங்கர்... அத தேடி கண்டு பிடிக்கணும் ... அதான் நம்ம வேலை ... இப்படி உடைஞ்சி போயிட்டா,,, எல்லாம் சரியாயிடுமா என்ன!  என பேச ஆரம்பித்தான்...ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் போல , கொஞ்சம் நேரத்தில் பிரகாசமானது ... என் மனது,, ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாது ... CERTIFICATES -ஐ திரும்ப பெற ,மிக பெரிய திட்டம் ஒன்றையும் வகுத்து கொடுத்தான்,.. 
கிடைக்குமா... என்றேன்,... கிடைக்கும் தைரியமா போ என்றான்.... அவன் சொன்னது போல , ஒரு வாரம்  இடைவெளி விட்டு .. அவன் திட்டத்தை முழுமையாய் செயல்படுத்தினேன்.. CERTIFICATES - என் கையில்... அதனை  தொடர்ந்து , அத்தனை முயற்சிகளும் அவன் உத்தரவுபடி தான் நடந்தது, அடிக்கடி என் ரூமுக்கு வந்து அறிவுரைகள் வழங்கி விட்டு செல்வான்.... அறை நண்பன் ரெங்கராஜனிடம்    இவன் பற்றி சொல்லலாம் என்றால் ..அவன் வரும் நேரமெல்லாம் , ரெங்கராஜன் , தான் எழுதி கொண்டிருக்கும் HARDWARE ENGINEER புத்தகம் சம்பந்தமாக வெளியே சென்று விடுவான்.

மீண்டும் ஒருமுறை , SURVIVAL என்ற கால்பந்து வீரன் , ஷங்கர் என்ற பந்தை . பணத்தேவை என்ற கோல் போஸ்டை நோக்கி உதைக்க , RWANDA என்ற கிரௌண்டில் வந்து விழுந்தேன்,... 
ஒரு வருடம் எல்லாம் சரியாய் போய் கொண்டிருந்தது...நமக்கு  எந்த சம்பந்தமும் இல்லாத மனிதர்களின் வளர்ச்சியை பார்த்து பொறமை கொள்வதும் , பொறுமுவதுமான மனிதர்கள் இந்த பூகோளத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்... அப்படியான தொந்தரவுகளின் தொந்தரவு பொறுக்க முடியமால் ,ஒரு தடவை வெடித்துச்  சிதறிவிட்டேன்...  
இயலாமையின் போது  மனம் ஆதரவையும் ஆறுதலையும் தேடுவது இயல்பு.. அப்படிதான் செந்தில் கணேஷை பார்க்கலாம் என சென்றேன்... அவன்  வீட்டிலும் இல்லை... மொபைல் ஆப் ...... மீட்டிங்-ல் இருப்பான் ...வெகு நேரம் , அவன் வீட்டு வாசல் நின்றவாறு ,,, வானத்தை வெறித்து பார்த்தேன்.. என்ன மாதிரியான உலகம் இது..! மனிதர்கள் இவ்ளோ குருரமாக இருக்கிறார்களே... ! நான் இவர்களுக்கு என்ன தீங்கு செய்தேன் ,,,இவர்களை பற்றி நான் யோசிப்பது கூட கிடையாது... ஆனால் நம்மையே குறி வைக்கிறார்களே... ஒருவன் தனித்துவத்தோடு வாழ ஆசைபடுவது தவறா... மனம் பலவாறாக தவித்தது.. இறுதியில்,  LEAVING RWANDA   என தீர்க்கமான  முடிவெடுத்து ... வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. மறுபடியும்  அவசரப் படுகிறோமோ என மனது குழம்பியது ,,.,, 
குறுகிய மன மனிதர்களிடையே வாழ்வதை விட செல்லலாம் என தோன்றியது,யோசித்தவாறே நடந்த என்னை கடந்து செல்ல முயன்றவர் , திடிரென என்னை தடுத்து நிறுத்தினார்..
ஒட்டு மொத்த அதிர்ச்சியும் சந்தோசமும் ஒருங்கே நடந்தேறியது அங்கே......  ஆஆம்................ ராஜா.....வே....தான் ,,,
நீ இங்கே என்ன பண்றே ! என நான் கேட்க எத்தனிப்பதற்குள் .... அவனே  இந்த கேள்வியை கேட்டான்...
எல்லாவற்றையும் கேட்டு முடித்தவன் , கட கட வென சிரித்தான்.. இன்னமும் நீ மனதளவில் வளரவே இல்லை ஷங்கர்.... என்றவன்...
நீ சொல்லும் அத்தனை பிரச்சினைகளும் , இந்த உலகத்தின் அத்தனை மூலைகளிலும் இருக்கிறது... நீ எங்கு ஓடுவாய் என்றான் !
அவன் எனக்கு சொன்ன பழைய கதைகளை நினைவு கூர்ந்தான்..

வில்வித்தையின் போது , துரோணர் தன் மாணவர்களிடம் , ஒரு மரத்தை காட்டி ,உங்களுக்கு என்ன தெரிகிறது என்றாராம்.. அனைவரும் ஆளுக்கு ஒரு பதிலைச் சொல்ல , அர்ஜுனன் மட்டும் , எனக்கு பறவையின் கண்கள் தான் தெரிகிறது.. என்றானாம்...
அந்த மாதிரி தான் ஷங்கர் ,,,, நமக்கு நம் டார்கெட் மட்டும் தான் கண்ணுக்கு தெரிய வேண்டும் என்றான், 

அதே மாதிரி இன்னொரு கதை..
வழக்கம் போல எமதர்மன்  , தன் தின கணக்கு வழக்குகளை ,பெருமாளிடம் ஒப்படைப்பதற்காக .. வைகுண்டம் வந்தார்....அப்பொழுது வைகுண்டம் வாசலில் எலி ஒன்று விளையாடி கொண்டிருக்க , நீ இங்குதான் இருக்கியா என தன் கர்ஜனை  குரலில் கேட்டு விட்டு உள்ளே சென்று விட்டார் ! அய்யய்யோ கேட்டது எமதர்மனாயிற்றே ,,, நம்மை கொல்லாமல் விடமாட்டார் என பயந்த எலி ... வைகுண்டம் வாசலில் நின்ற , பெருமாளின் வாகனம் கருடனிடம் ,,,, அழுது புலம்ப ,,,, அதை காப்பாற்றுவதாக உறுதி அளித்த கருடன் ,,,,தன் தோள் மேல் தூக்கி கொண்டு ,,,, ஏழு மலை,கடல் தாண்டி ,,, ஒரு பாறையின் அடியின் , பத்திரமாக வைத்து விட்டு வந்து விட்டதாம். வைகுண்டத்தில் இருந்து வெளியே வந்த எமதர்மன்  எலியை காணமல் அங்கும் இங்கும் தேட , அதை பார்த்து சிரித்து கருடன், என்ன எமதர்மா  ! எலியைதானே தேடுகிறீர் ! நீங்கள் திரும்பி வரும்போது அதை கொன்று விடுவீர்கள் என தெரியும் ! அதான் ஏழு கடல், மலை தாண்டி, பாறையின் அடியின் பத்திரமாக வைத்து விட்டேன் . என பெருமிதமாக சொன்னதாம்.இப்போது , குபீரென சிரித்த எமதர்மன் ! அதனுடைய விதிப்படி ! இன்று அந்த எலி , ஒரு பாறையில் நசுங்கி சாக வேண்டும் ! நான்கூட விதி தவறோ என நினைத்தேன் ! என்றும் மீண்டும் சிரித்தவாறே சென்றாராம் ...

அந்த மாதிரி தான் , நாம எங்க ஓடினாலும் , பிரச்சினை பிரச்சினை தான்,, இங்கே இவர்கள் ! அங்கே வேறு மனிதர்கள் அவ்ளோதான்.!
அவன் பேச பேச அவனையே பார்த்து கொண்டிருந்தேன் ,, இவன் மட்டும் எப்படி ஒரு COMPLETE POSITIVE THINKING PACKAGE- ஆக இருக்கிறான்  என புரியவில்லை.. 

அப்புறம் அடிக்கடி ரூமுக்கு வர ஆரம்பித்தான் .. ஒன்றாக படம் பார்ப்போம் ,, நான் அவனுக்கு TERMINAL பார்க்க கொடுத்தேன் ,,, அவன் என்னை LIFE IS BEAUTIFUL   பார்க்க சொன்னான் ,, ஹிட்லர் பிடிப்பவனுக்கு ! எப்படி LIFE IS BEAUTIFUL படம் பிடிக்கிறது என்று கேட்டால் ! எதுவும் சொல்லாமல் அமைதியாய் இருந்து விடுவான்,,

ஒரு சனிக்கிழமை மதிய வேளையில் , கொஞ்சம் தூங்கலாம் என கண் அயர்ந்தேன்,,, கனவில் சினேகாவோ! அனுஷ்காவோ    ! யார் என சரியாய் தெரியவில்லை ... அவசரத்துக்கு யாராக  இருந்தால்  என்னவாம்! என யோசித்து கொண்டே அருகில் செல்ல முயன்ற போது ,.,
தட தட வென யாரோ தட்டி எழுப்பியது மாதிரி இருக்க! என்னமோ ஏதோ  என்று ! அடித்து பிடித்து எழுந்தால் ,,, வேறு யாருமில்லை நம்ம ராஜா தான் ,, சனிக்கிழமை மதியம் லீவ் என்றால் நேராக என் ரூமுக்கு வந்து விடுகிறான் ..பாவிப்பயல்.. வந்தவன் கொஞ்ச நேரம் கழித்து  வந்துருக்க கூடாதா ! ....

என்ன ஷங்கர் தூங்குறியா ! என்றான்,,,, உலகத்திலேயே  தூங்குறவனை எழுப்பி தூங்குறியா!! என கேட்ட முதல் மனிதன் நீதான் என்றேன் ,

என்னடா விஷயம் என அழுத்து கொண்டேன்,,, ஒண்ணுமில்ல ! நம்ம பூமி அந்தரத்துல தொங்கிகிட்டு இருக்கு  கரெக்ட்-தானே என்றான்... பூமி மட்டுமா ! நாம எல்லாருமே empty space -ல தொங்கிண்டுதான் இருக்கோம் ... இதை நீதானடா!  எனக்கே சொன்னது  ! என்றேன். 
ஒருவேளை இந்த பூமி திடீர்ன்னு விழுந்தா!!  எங்கடா  போய் விழும் ... என்றான் ,... எனக்கு அழுவதா சிரிப்பதா என தெரியாமல் , ரெண்டும்  கெட்டான் மனநிலையில் இருந்தேன்...கனவை கலைத்து விட்ட கடுப்பில் ,,, உன் தலை மேலதாண்டா!!  விழும் என்றேன்,,

... இப்படி சில நேரம் அவன் விசித்திரமாகவும்  நடந்து கொள்வான்,, என்ஜாய் பண்ண வேண்டிய 29 வயதில் , இப்படி பூகோளத்தையும் ,  வரலாறையும் பற்றி பேசி கொண்டு இருக்கிறானே  என எனக்கும் வருத்தம் தான்,,,

இந்த மாதிரியான  ஒருநாளில்தான் ! எனக்கு எங்க அம்மா பெண் பார்த்திருப்பதாகவும் , பெண்ணின் ஊர் திருச்சி ஸ்ரீரங்கம்  என்றும் சந்தோசமாக ராஜாவிடம் கூறினேன், 

"கல்யாணம்கிற பேர்ல எப்படிடா ஷங்கர் , முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணு கூட படுக்க ரெடி ஆயுடுறீங்க .கல்யாணம்கிறது என்ன ! 
நீங்க ஒரு பொண்ணு கூட நிரந்தரமா படுக்கறதுக்கு இந்த SOCIETY கொடுக்குற அங்கீகாரமா  ..."  என்றான் ..
 
 இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை ... கொஞ்சம் அதிர்ந்து போனேன்... இதே மாதிரி வேறு யாரவது கேட்டிருந்தால் .... நடப்பதே வேறு... ஆனால் கேட்டது ராஜா- வாயிற்றே.. .. அதிர்வில் கொஞ்சமும் சலனமற்று நின்றேன் ,,..
 

அவனை பற்றி எனக்கு நன்கு தெரிந்திருந்தாலும் ! இந்த மாதிரியான சுளீர் வார்த்தைகள் ! என்னை காயப்படுத்தவே செய்தன..ஒரு மங்களகரமான  விஷயத்தை, இந்த மாதிரி ஒரு இயந்திர மனிதனிடம் கூறியது நம் தவறு ,      என என்னை நானே நொந்து கொண்டேன் ...
அவனிடம் பேசி ஜெயிக்க ! என்னை மாதிரி அப்பிராணிகளால்  முடியவே முடியாது.. அதனால் அந்த டாபிக்-ஐ அப்படியே விட்டு விட ..

பிறிதொரு நாளில், அவனிடம் பயந்து கொண்டே ! ஏன்டா ராஜா உனக்கும் 30 நெருங்க போகுது ,,, கல்யாணம் கில்யாணம் என கேட்டு முடிக்கும் முன்னே ! திரும்பி முறைத்தான்.... என்கிட்ட நெருங்கி வந்தவன் ! " நான் 30 வயசுல தான் ஒரு பொண்ணு கூட படுக்கணும்னு  யாருடா சொன்னது " ஏன் அதுக்கு முன்னாலயும், அப்புறமும் என்னால முடியாதா என்றான்,,, 

அவன் "முடியாதா " என்று கேட்டதன் அர்த்தம் புரிந்தது ! திரும்பி என்ன பேசினாலும் சொன்னாலும் எரிந்து விழுவான் ! அதனால் மௌனமாய் இருந்து விட்டேன் ...

நாட்கள் கடந்தன! இன்று இந்த சந்தோஷமான விஷயத்தை முதலில் ராஜாவிடம் சொல்ல வேண்டும் ! என முடிவு கட்டி கொண்டேன் !

அன்று என்னமோ ரொம்ப சோகமாகவே இருந்தான் ராஜா. வந்தவன் என்னை கொஞ்சமும் சட்டை செய்யாமல் ,சுவற்றை வெறித்து பார்த்தபடியே உட்கார்ந்திருந்தான் !!!!
 இந்த மாதிரி அவன் UPSET -ஆக இருந்து நான் பார்த்ததே இல்லை !  என்ன என்று கேட்கலாம் என்றால் , அதற்கும் எரிந்து விழுவான் ! 

கொஞ்சம் தட்டு தடுமாறி  , 
"ராஜா உன்னிடம் நான் ஒண்ணு சொல்லணும் ! திட்டமாட்டியே  என்றேன்!
"சுவற்றை பார்த்தவாறு !  சொல்"  என தலையசைத்தான்  ! 

"அன்னிக்கி சொன்னேனே அந்த ஸ்ரீரங்கம் பொண்ணு ! அது பிக்ஸ் ஆயிடுச்சு ! அம்மா !  காலையில் தான் போன் பண்ணி சொன்னாங்க ! அடுத்த வாரம் நிச்சயமாம் "  என்றேன்! என்ன சொல்வானோ என பயந்து கொண்டே !
கொஞ்சம் நேரம் ஏதும் பதில் பேசாதவன் ! நானும் உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் என பீடிகையுடன் ஆரம்பித்தான் ! 
"நான் இங்கு வந்த வேலை ! முடிஞ்சுடுச்சு ஷங்கர்  ! கிளம்புறேன் "
"அதான் உன்கிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன் "என்றான்.
 எனக்கு உலகமே ஒருமுறை நின்று சுழல்வது போது இருந்தது !
அசோக் ,, நித்தி, தியாகு போன்ற எத்தனையோ நண்பர்கள் , இங்கு  6 மாதம் , 
1 வருடம் என ப்ராஜெக்ட் க்கு வந்து சென்று இருக்கிறார்கள் .. இது அந்த மாதிரிதான் இருக்கும் என்றாலும் , ராஜாவை பிரிகிறோம் என்று நினைக்கும் போது !  அவனது பிரிவை தடுக்க முடியாது என்பது தெரிந்தாலும்! இயலாமை மேலிட , இல்லை ராஜா நீ போக கூடாது என கத்த ஆரம்பித்தேன்..

திடீரென, என் அறை கதவை திறந்த, பக்கத்து அறை நண்பர் சந்தோஷ்,
" என்னாச்சு  ஷங்கர் , ANY   PROBLEM ,  யார் கூட பேசிட்டு இருக்கீங்க " என்றார் .

அவரின் திடீர் வருகையை சற்றும் எதிர்பாராத நான் , தட்டு தடுமாறி , திக்கி திணறி ......

.....ரா....ரா ..ஜா......!!!!!!!!!!   என்றேன்,...

என்னை ஒரு மாதிரியும் ,,,, என் ஒரு அறையை சுற்றும் முற்றும் பார்த்தவர் , நிலைமை உணர்ந்தவராய் ,
"அதெல்லாம் உங்களை தவிர இங்க யாருமில்ல" ," பாருங்க ! மணி நைட் 1   ஆகுது !  லைட் ஆப் பண்ணிட்டு தூங்குங்க "என்றவர்!
என்னை படுக்க வைத்து விட்டு , லைட் ஆப் பண்ணி விட்டு சென்றார்...

ஆனால், படுக்கையின் மறுமுனையில் அமர்ந்திருந்த ராஜா ,சுவற்றை வெறித்து பார்த்தவாறு  இன்னமும்  பேசி கொண்டே இருந்தான்....

Thursday, 5 May 2011

பசங்க -- விமர்சனம்



                                                                                             எழுதப்பட்ட தேதி : 8 ஜூன் 2009 









நாயகன் (LIC Agent) :  இந்தா இந்த FORM-ல ரெண்டு கையெழுத்து போடு...
நாயகி : ஏன் ?
நாயகன்: எப்படியும் இவிங்க ரெண்டு பேரும் நம்மள சேரவே விட மாட்டேங்க்ய  , உன்கூட பழகனத்துக்கு  ஒரு 2 லட்சத்துக்கு பாலிசி யாவது போடு....
---------------------------------------------------------------
மசாலா சினிமாக்களின் அடிமையாக இருந்த என்னை அழ வைத்த முதல் படம் 
LIFE IS BEAUTIFUL , அதற்கடுத்து என்னை பிரமை
பிடிக்க வைத்த படம்
 " பசங்க".............

படத்தலைப்பையும் opening scene-களையும் வைத்து படத்தை குறைத்து மதிப்பிட்டு விட்டேன்.
கண்டிப்பாக இது அடுத்த சினிமா தலைமுறைக்கான  படம்..
நல்ல பாடமும் கூட.
அட !  நாம்தாம் இது என  பார்க்கும் ஒவ்வொருவரையும் நினைக்கவைக்கும் படம் .

நம்மை போல சிந்திக்க கூடியவர்கள் , ஒரே அலைவரிசையில் உள்ளவர்கள் நம் அருகில் இருந்தால் சிறந்த நண்பர்கள் ஆகிறார்கள்.
அதுவே எங்கோ இருக்கும்போது நமக்கு பிடித்த  நாயகர்கள்  ஆகிறார்கள்; அந்த வகையில் இயக்குனர்  பண்டிராஜ் என்னுடைய  நாயகன்;
சுப்ரமணியபுரம் , வெண்ணிலா கபடி குழு என நல்ல படங்கள் வந்தாலும் அதன் கதைக் களத்திற்கும் என்னுடைய  வாழ்க்கைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் இந்த அளவிற்கான தாக்கத்திற்கு நான் ஆட்படவில்லை.  துவக்கத்தில் அதிகபிரசங்கிதனம் , நடுவில் அந்த பையனுக்காக குடும்பமே ஓட்டப் பந்தயந்த்தில் கூட ஓடுவது, முடிவில் கைதட்டி உயிர் பிழைப்பது போன்ற கடுப்பேத்தும் விசயங்களை தவிர்த்து பார்த்தால் படம் கவிதை ....


சினிமாக்களை போரடிக்கும்போது  மட்டும் பார்த்த எனக்கு ,TOM HANKS நடித்த ,steven spielberg இயக்கியடெர்மினல் பார்த்த பிறகு , சினிமா நல்ல நண்பன் ஆனது. இன்றளவும் எங்கள்  மத்தியில் TOM HANKS அந்த படத்தில் பேசும் ENGLISH ரொம்ப பிரபலம் .... கிட்ட தட்ட 25 தடவையாவது பார்த்திருப்போம் ....

என்னுடைய  12 வயதில்  என்னை கடந்து சென்ற என் முதல் உயிர் நண்பன் ரமேஷ் பாபு , அதுவரை நட்போ அதன் வாசமோ அறிந்திராத எனக்கு நட்பென்றால் இப்படிதான் இருக்கும் என என் மீது அக்கறை காட்டிய அந்த 12 வயது சிறுவன் ....  உள்ளார்ந்த பாசத்தோடு என்னிடம் பழகிய முதல் ஜீவன் .
சொந்த அண்ணனால் கூட சில காரணங்களால் தவிர்த்தும் ஒதுக்கவும் பட்ட என்னை , எந்தவித எதிர்பார்ப்பின்றி பிரதிபலனின்றி ஏற்று கொண்ட நண்பன் ... 
ஏழாம் வகுப்பு முடிந்தவுடன் , அப்பாவுக்கு விருத்தாசலம் மாற்றலாக , திரும்பி வருவேன் என பொய் சொன்ன அரிச்சந்திரன் ...
என   26 வருடத்தை 2 1/2 மணி நேரத்தில் திரும்பி பார்த்த உணர்வு.........பசங்க படம்.........

வாழ்க்கை மிக அழகானது  .... காதலும் கூட ...
வாழ்க்கை மிக எதார்த்தமானது .... காதலும் கூட...     இந்த படத்தில் அது  அருமையாய் சொல்லப்பட்டுள்ளது ...
அதுவும் ரொம்ப POSITIVE பொண்ணாக வரும் ஷோபிக்கன்னு ,எந்த ஒரு விசயத்தையும் ரொம்ப CASUAL - ஆக எடுத்து கொள்ளும் சித்தப்பா கேரக்டர் ... என எல்லா கேரக்டர்-களும் செதுக்க பட்டுள்ளன .

என் நண்பர்கள் அதிக பட்சம் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் .. காதலித்து கொண்டிருப்பவர்கள் .. போனவாரம் சென்னையில் ஒரு ROMEO காதலுக்காக தீக்குளித்து புரட்சி செய்தார் ... இதை விமர்சித்த என்னை காதலிச்சு பார்த்த  உனக்கு வலி தெரியும் என ஒரு நண்பர் சாட்டிங் - ல்  சண்டைக்கு வந்தார்..

 காதல் என்ற உயர்வான விஷயத்தை கடக்காமலே வந்து விட்ட நான் துரதிர்ஷ்டசாலிதான் .. ஆனால் அந்த காதல் என்ற களத்தில் இறங்காதவர்கள்  அதை பற்றி பேசவே கூடாது என்பதும் , காதலித்து திருமணம் செய்த அல்லது செய்து கொண்டிருக்கிரவேனேல்லாம்  ஏதோ பெரிய புடிங்கி மாதிரி பேசுவதும் ..............
 அப்படி என்ன லட்சணத்தில் இவர்கள் காதல் செய்கிறார்கள் ...எல்லாருக்கும் காதலை பற்றி ஒரு விளக்கம் இருக்கும் , உனக்காக நான் , எனக்காக நீ .. என இருப்பது தான் புனிதமான காதல் ...  நட்பும் காமமும் இதன் கலவைதான் காதல் ... ரொம்ப புனிதமானதும் கூட... இவர்கள் புனிதம் எல்லாம் காதலித்து கட்டிய மனைவி ஊருக்கு போகும் வரை தான் ... காதலி தொலை தூரத்தில் இருக்கிறாள் என துரோகம் செய்வதும் ..........இதையே ஒரு பெண் செய்தால் குய்யோ முய்யோ என அடித்து கொள்வது , இதற்க்கு 
Male chauvinismஎன்ற கேவலமான விளக்கம் வேறு... பசி என்றால் எல்லாருக்கும் ஒன்னும்தான் ... உனக்கு மட்டும் தாங்க முடியாது ... கருப்பியோ வெள்ளையோ    ஏதோ வேணும் ... ஆனா காதலித்த மனைவி மட்டும் குனிந்த தலை குனிந்தபடியே இருக்கணும் ... இந்த கருமத்துக்கு காதல் திருமணம் , சம உரிமைன்னு வீண் விளம்பரம் வேற... இவனுங்க காதல்ல ... சரி அதை விடுங்க இன்னொரு மெயில்-ல பார்த்துக்கலாம் . நம்ம " பசங்க " matterukku  வருவோம்

இவர்களுக்கு மத்தியில்  சில உண்மையான காதலர்களால்  தான் இன்னமும் காதல் உள்ளது .......................

இந்த கால செல் காதலை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.படத்தில் காதல் சொல்லப்பட்ட விதம் ரொம்ப எதார்த்தம்  ..
இந்த படத்தில் எல்லாரும் ரொம்ப நல்லவர்கள்களாக காட்டபட்டிருப்பது சூப்பர்.. கடைசியில் எல்லா படத்தை  போலவே touching கிளைமாக்ஸ் தான் என எதிர்பார்க்கும் நமக்கு ,, படம் POSITIVE -ஆக முடிவது சந்தோசமாயிருக்கிறது .இல்லையென்றால் தமிழ் சினிமா இலக்கண படி இந்த மாதிரி படங்களில் யாரவது செத்தே ஆக வேண்டும் . அந்த கேனத்தனமான  செண்டிமெண்ட் தவிர்க்க பட்டருக்கிறது   சின்ன பசங்களை ரொம்ப கஷ்டப்பட்டு வேலை வாங்கியிருக்கிறார் .. சோபிக்கன்னுவை போனில் ஓட்டுவதும் அதற்க்கு அவருடைய reaction-ம ரொம்ப கவிதை.. 

இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள்  அனைவரும் அவரவர் கதாபத்திரத்தில் 

"பசங்க " சேகரித்து வைத்து கொள்ள வேண்டிய பொக்கிஷம் ....

நா.............ன்......... நா........ன்................. நானே................தான் ............... எழுதினேன்.........

                                                                                         எழுதப்பட்ட தேதி : 29 ஆகஸ்ட்  2010   





கடந்த "ஆதலினால் காதல் செய்வீர்கள் "  மின்னஞ்சலுக்கு , இரெண்டே வகையான reply --தான் வந்திருந்தது ..... ஒன்று யாரந்த பெண் ?  அடுத்த கேள்வி..திருவிளையாடல் படத்தில் தருமிக்கு கேட்கப்பட்ட கேள்வி ..... இதை யார் எழுதியது....

இந்த இரண்டு கேள்விக்கும் ..... ஒரே பதில் வேண்டுமானால் , தசவதாரம்  பட ஸ்டைல்-ல் குறைந்த பட்சம் ஒரு பத்து வருடமாவது  பின்னோக்கி செல்ல வேண்டும்...அதாவது சுஜாதாவும் ... HITECH கதைகளும் ..... எனக்கும் அறிமுகமில்லாத காலம் ... படித்து மகிழ பெரிய எழுத்தாளர்களின் புத்தகங்கள் கிடைக்காவிட்டாலும்... உள்ளூர் எழுத்தாளர்களின்  பதிப்புகளை தேடி படித்த காலம்...

நான் டிப்ளோமா முடித்த விடுமுறை.... எனக்கு எழுத்துலகின் மீது தீராத காதலும்....மோகமும் படர ஆரம்பித்த சமயம்...புத்தகங்களை தேடி படிக்க ஆரம்பித்திருந்தேன்....அதையும் தாண்டி என் கட்டுக்கு அடங்காமல் பயணித்து கொண்டிருந்த என் கற்பனை குதிரையை என்ன செய்வது என்று தெரியாமல் ... ஒரே வழி ... எழுதி தொலைப்பது .... என யூகித்து இருந்த வேளையில் .... பிறந்த முதல் கதை...... ரோபோ ....... அதாவது ..... என் எண்ணம் , விசித்திரமான சிந்தனைகளை  எப்போதும் அசை போட்டபடியே இருக்கும் .....இப்படியான சிந்தனைகளை எழுதுவதன் மூலமே , அதன் இம்சையிலிருந்து நீங்கள் தப்பிக்க முடியும்...

2000 மத்தியில் , அதாவது ஜூன் மாதத்தில்,.... தொடர்ந்து ஒரு வாரம் .... 100   பக்கத்திற்கு மேல் எழுதப்பட்ட ஒரு குழந்தை தனமான கதை ரோபோ .....

கதையின் அவுட்  லைன் இதுதான்  ...கதை ஜனவரி 20   2097 -ல்  ஆரம்பிக்கும் ...  அடுத்து வரும் அதிபர் தேர்தலில் மீண்டும் தானே ஆட்சி க்கு வர , எதாவது ஒரு திட்டத்தை அறிவித்து .. மக்களை கவர , நமது நாட்டின் அதிபர் திட்டமிடுவார் .. அன்றைய தினத்தில் ரோபோ க்களை வீட்டு வேலைக்கு வைத்து கொள்வது ... சாதாரண மக்களுக்கு ஒரு எட்டா கனியாக இருக்கும்...

ஆக  .. அரசாங்கமே அனைவருக்கும இலவசமாக  ரோபோ என்ற திட்டத்தை அறிவித்து .... அதன் மூலம் மக்களின் ஆதரவை பெறுவது ...இதற்கான ,,, முயற்சியில் இறங்கச் சொல்லி , அதிபர் விஞ்ஞானிகள்  குழுவுக்கு உத்திரவிட்டிருப்பார்... அதாவது ஜன 26 அந்த திட்டத்தை அறிவித்து .... ஆக் 15 -ல் நடைமுறைக்கு கொண்டு வருவது ... அதனை தொடர்ந்து மக்களின் ஆதரவை பெற்று ... அடுத்த தேர்தலிலும் ஆட்சியை பிடிப்பது ....

கதை படி டெல்லியில்  ஒரு ஹீரோ ...  ..  டெல்லி ஹீரோ லவ்வி கொண்டிருக்கும் ஒரு துணை scientist ....அந்த திட்ட குழுவின் , ஒரு சாதாரண உதவி விஞ்ஞானி  .. டெல்லி நாயகனின் காதலி ... துணை தலைமை விஞ்ஞானியின் மகள்.... ..
சென்னை யில் ஒரு ஹீரோ ....  கல்யாணமானவர் ..அரசாங்க வேலை பார்க்கும் பக்கா குடும்பஸ்தன்...அந்த திட்டத்தின் பயனை  அடைய போகும் ஒரு நடுத்தர குடிமகன் ,,,

கதை ..... டெல்லி அதிபர் மாளிகை மீட்டிங்-ல் இருந்து ஆரம்பிக்கும்.... அதிபர் , தலைமை விஞ்ஞானி, துணை தலைமை விஞ்ஞானி... கதையின் நாயகன் ,,, நாயகி ... இவர்களை வர்ணித்து , பிறகு களத்தில் இறங்கும்....

திட்டமிட்டபடியே , ஜன 26 -ல் அறிவிக்கப்பட்ட திட்டம் ....  ஆக் 15 -ல் செயல்படுத்த படும்போது ..... நாடு ... மிகப்பெரிய  அதிர்ச்சியை சந்திக்கும்....  அதாவது .... பாமரனுக்கும் ரோபோ , என அறிவித்து ... அதனை வழங்கி.... ஆக் 15 ஒரே நேரத்தில் அதிபர் கையால் இயக்கி வைப்பதாக பிளான்....ஆனால் அப்படி இயக்கும் போது
  அதே ரோபோ க்களே ..... நாடு சுதந்திரம் அடைந்த அதே ஆக் 15 -ல் நாட்டை சிறை பிடிக்கும்.... பின்னணியை ஆராயும்போது .... தீவிரவாதிகள் , கத்தியின்றி ... ரத்தமின்றி ... கொஞ்சம் மூளையை பயன்படுத்தி ,  நம் திட்டத்தை வைத்தே நம்மை மடக்கியிருப்பர்கள்.....

இப்பொழுது நாட்டை காப்பாற்றவது  எப்பொழுதும்  போல ...விஞ்ஞானி  நாயகனின் பொறுப்பு ... அவனுக்கு உதவுவது நாயகியின் கடமை...சம்பந்தமில்லாமல் தீவிரவாதிகளிடம் மாட்டி கொண்ட, தன்  குழந்தையை காப்பாற்ற சென்னை நாயகனும் களத்தில் இறங்க ..இவர்கள் இருவரும் இணைந்து எப்படி .... தீவிவாதிகளை அதே பாணியில் தந்திரமாக வீழ்த்துகிறார்கள் .... என 100 பக்கத்துக்கு  நீட்டி முழக்கியிருப்பேன்.. கடைசியில் நாயகியின் அப்பாதான் எல்லாவற்றிற்கும் காரணம் என கண்டுபிடித்து .... நாட்டை காப்பாற்றி .... அதிபர் கையால் மெடல் வாங்கி ...விஞ்ஞானி அந்தஸ்தை பெற்று ... நாயகியை கைபிடிப்பார்...

எழுதி முடித்தாயிற்று .... யாரவது படிக்க வேண்டுமே.... இருக்கவே இருக்கிறார் நம் முதல் பரம விசிறி .... அம்மா..
புத்தகங்களும் , கதைகளும்  அம்மாவுக்கும் ரொம்ப விருப்பம் தான் ... முழுவதையும்  படித்தவர் .... நன்றாக இருப்பதாக பாராட்டினார்....
ஆனால் நான் அந்த கதையில் டெல்லி நாயகியை .... அரேபிய குதிரை மாதிரி உடல் வாகு ... கோதுமை நிறம் ... என ஏகத்துக்கும் வர்ணித்திருந்தது .... அம்மாவுக்கு ஏதோ உரைத்திருக்க வேண்டும்... ஏம்பா வேலை கிடைக்கிறவரைக்கும் பெரியப்பா கடையில பட்டன் கட்டலாம்ல என்றார்... அம்மா முகம் பார்த்தேன் ... ஏதோ சொல்ல வருகிறார் என்று புரிந்தது... நோட்டும் புத்தகங்களும் மூட்டை கட்டபட்டன... அத்தோடு என் எழுத்தார்வமும் ....

ஏன் இவ்ளோ பெரிய விளக்கம் என்று நீங்கள் யோசிக்கலாம் .... இப்போ, எனக்கு வந்த ரெண்டு கேள்விக்கும் பதில் ...
எனக்குள் எழுதும் விருப்பம் , கடந்த 10 வருடமாக ஒரு அட்டையை போல் ஒட்டி கொண்டுள்ளது என்பதும் .. ஒன்றை பற்றி எழுத கொஞ்சம் கற்பனை போதும்..என்பதும்.....

"மதராசபட்டினம்" மெயில் எங்கோ பார்த்த ஒரு சினிமாவை பற்றிய விமர்சனம்...
"ஆதலினால் காதல் செய்வீர்" எங்கோ கேட்ட காதலை பற்றிய அபிப்ராயம்... எனக்கு காதலும் அதன் அனுபவமும் அமையாமல் போனது துரதிர்ஷ்டம்தான் என்றாலும்....கண்டிப்பாக என் எதிர்கால மனைவியை கண்மூடித்தனமாக காதலிப்பேன் எனவும்.... அப்பொழுது அந்த ரியல் காதல் அனுபவத்தை இன்னும் விரிவாக சுவராஸ்யமாக எழுதுவேன் என்றும்  கூறி கொள்கிறேன்....என் நண்பர்களுக்கு திருமணத்திற்கு முன்  காதல் ... எனக்கு அப்புறம் அவ்வளவுதான்...

இதை எழுதியது யார் என்ற நக்கீர(நக்கல்) கேள்விக்கு ..... அதே திருவிளையாடல் தருமியின்  பதில் தான்.,....

நா.............ன்..............   நா........ன்................. நானே....................தான் ...............  எழுதினேன்.........

மதராசபட்டிணம்...

                                                                                           எழுதப்பட்ட தேதி : 15  ஆகஸ்ட் 2010


                                                                                                                            


"மறந்த்த்துட்ட்டியா"  என்ற கதாநாயகியின் ஒற்றை வரியில் சூடு பிடிக்க தொடங்குகிறது படம்... 

காதலுக்கு மொழி இல்லை ..... அது உணர்வுகளை மூலமே பேசி கொள்கிறது.... காதலின் ஆரம்பமும் சரி.... முடிவும் சரி ..... சரி வர புடிபடுவதேயில்லை..... எப்போ வந்திருக்கும் என பல மணி ஆராய்ந்தாலும் .... அந்த பூம் என்ற நொடியை கண்டறிவது முடியாது ....

12 வருடத்திற்கு ஒரு முறை பூக்குமாம் அத்திப்பூ... அப்படித்தானோ டைரக்டர் விஜய் .... இத்தனை நாள் எங்கிருந்தார்  இந்த மனுஷன் ..... என்று நினைக்க தோன்றுகிறது.... கிரீடம் படத்தில் தனக்கென ஒரு ஸ்டைலை கொண்டு வந்த மனிதர் .... இந்த படத்தில் பட்டய கிளப்பி விட்டார்...

தமிழ் டைட்டானிக் என்று சர்வ சாதரணமாக கமெண்ட் செய்கின்ற அனைவருக்கும் ஒரு கொட்டு... உள்ள லவ் ஸ்டோரி-எ பார்க்க  முடியல ..... இதுல 1947 -ஆம் என சலித்து கொண்டே போனால்....முதல் frame-ல் இருந்து கடைசி frame வரை கண்ணை எடுக்கவே முடியவில்லை.... சினிமா என்ற பெயரில் ஒரு இரண்டரை மணி நேர கவிதை....மதராசபட்டிணம்.... 

கதையின் மிகபெரிய பலம் .... கதாநாயகியின் வயதான  தோற்றத்தில் நடித்திருப்பவரும் .... டயலாக்  இல்லாமல் வெறும் கண்களாலே நடித்திருக்கிறார் ......பார்வையில் பரிதாபத்தை அள்ளிக் கொள்கிறார்...

அடுத்து எமி ஜாக்சன் .... கதையின் நாயகி ...... முதல் படம் ... அதுவும் வேற்று மொழி படம் ....... யப்பா ! நம்பவே முடியலை .... படத்தின் மையப்புள்ளி என்பதை உணர்ந்து ..... மிகுந்த சிரத்தையுடன் .... 

அடுத்து கலை  இயக்குனர் செல்வகுமார்  ,,,,, இன்னும் எத்தனை திறமைசாலிகளை தமிழகம் சுமந்து கொண்டுருக்கிறதோ.....

எல்லாவற்றிற்கும் மேலாக நம்ம சின்ன இசைப்புயலின் இசையும் , பின்னணியும் ,,,,,, " தான தோம் தனன , தான தோம் தனன.." பூக்கள் பூக்கும் தருணம் "... ஒரு பாடலே போதும் .......

தமிழ் சினிமா -வின் கிரீடத்தில் அடுத்து ஒரு வைரக்கல்  ....... விஜய்.... தமிழ் சினிமா ரசிகர்கள் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம் ...

பொய்மை ,புரட்டு , கயமை .... துரோகம் ..... ... என கலியுக குப்பைத் தொட்டி நிரம்பி வழிகின்ற போதிலும்..... பூகோளம் ......இன்னும் சுழன்று கொண்டு இருப்பதன் காரணம் ..... உண்மை , நேர்மை , எதிர்பார்பில்லா அன்பு , இவை எல்லாம்  இன்னும் ஏதோ ஒரு மூலையில் மௌனமாய் ஊர்ந்து கொண்டிருப்பதால்தான்...

அப்படித்தான் தமிழ் சினிமாவும் ,, பஞ்ச் டயலாக், item டான்ஸ் , six pack fever , என நலிந்து கொண்டிருந்தாலும் , அவ்வபோது கம்பீரமாய் உலக சினிமாவில் உட்கார காரணம் .... விஜய் மாதிரி ஆபத்பாந்தவ இயக்குனர்கள் ..மதராசபட்டிணம் மாதிரி சினிமா கவிதையை அவ்வப்போது  தெளித்து விட்டு செல்வதால்தான்...

மதராசபட்டிணம் ----- புதுகவிதையான மரபுக் கவிதை ................ ஸ்கோரிங் 98 மார்க்ஸ் ............. டோன்ட் மிஸ் இட்...

ஆதலினால் காதல் செய்வீர்...

                                                                                                எழுதப்பட்ட தேதி : 25 ஆகஸ்ட் 2010 
       



இந்த  பிரபஞ்சத்தின்  கெட்டு  போகாத  ஒரே  விஷயம் தேன்  என  என்  நண்பன்  சொன்னான் ...... ஆனால்  காதலும்  கூட  ..... காதலர்கள்  தான்  கெட்டுப் போகிறார்களே தவிர காதல் இல்லை..... நாத்திகம் பேசுபவர்களையும் காதலை வெறுப்பவர்களையும் ஒரே தராசில் வைக்கலாம் .... ஏனெனில் இருவருமே நம்பிக்கையை இழந்தவர்கள்...... காதல் , காமத்திற்கான திறவுகோல் எனவும் , அதனை அடைந்தவுடன் காதல் மறைந்துவிடும் ...எனவும் நானே பலமுறை வியக்ஞ்யம்  பேசியிருக்கிறேன்... காதலை காமத்தையும் ஒப்பிடுவதையே இப்பொழுது நான் வன்மையாக கண்டிக்கிறேன்....இங்கே நல்ல காதல் கிடைக்க பெற்ற அனைவருமே புண்ணியவான்கள்....சமீபத்தில்,  ஆனந்த விகடனில் , மதனின் காதல் காமம் பற்றிய அருமையான பதில் படித்தேன் ...உண்மையான காதலர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்...   கடவுளை எப்படி உணர மட்டுமே முடியுமே அப்படியே காதலும்......அது ஒரு அலாதி இன்பம்... ஒரே நேரத்தில் அதிகப் பட்ச உற்சாகமும், அதிகப் பட்ச சோர்வும்...கிடைக்கப் பெறுவது காதலில் மட்டுமே...நீங்கள் சரியான எண்ணத்தில் பயணித்தால் காதலும் உங்களுடன் சரியாகவே பயணிக்கும்....

எனக்கு லவ் அனுபவெல்லாம் கிடையாது என பெருமையாக நீங்கள் சொல்லிக் கொள்பவரா...உண்மையில் நீங்கள் 
unlucky தான்... இந்த பிரபஞ்சபத்தின் அமைப்பு எந்த அளவுக்கு ஆச்சர்யமோ ! அதை விட பல மடங்கு ஆர்ச்சயம் இந்த காதல்...  இது ஒரு மாயக் கப்பல்.. நல்ல சிந்தனையில் இயங்கினால் மட்டுமே கரை சேர வாய்ப்பு... உண்மையான காதலுக்கு காமம் ஒரு பொருட்டே அல்ல.... அது அதையும் தாண்டி பல காலம் பயணிக்கும்.....

காமம் புளித்து போக கூடியது.... காதல் என்றும் அதே இளமையுடன் இனித்து கொண்டிருப்பது.....பார்த்தவுடன் காதலில் நம்பிக்கையில்லை.....
புரிதலில் தான் இருக்கிறது உண்மையான காதல்.... அழகிய தீயே படத்தில்  வருமே " ஜஸ்ட் பூம் " அந்த மாதிரி....

காதலில் எதச்சையாக   காமம் கலந்துவிட்டால் தப்பில்லை ... ஆனால் காதலின் நோக்கமே காமம் என்றால்... உங்களுக்கு கிருமி போஜனம் தான்....
அதுவுமில்லாமல்  உங்கள் உடல் பசிக்கு தயவு செய்து காதல் என்ற போர்வை போத்தாதீர்கள்...
காதலுக்கு பசி தூக்கம் என எதுவும் உணரத் தெரியாது ... அது ஒரு மாதிரியான மாதிரி..... உருவக படுத்தவே முடியாத ஒரு விஷயம் .....
ரொம்ப தூரத்தில் தெரியும் ஒரு பொருளை , ஒருவர் உங்களுக்கு காண்பிக்கும் போது , எங்க , எங்க  என பலமுறை கேட்டு , ரொம்ப உன்னித்து பார்த்து 
கடைசியில் தெரிந்தவுடன் அட! ஆமாம்!  என ஆச்சர்யத்தில் வாய் பிளப்போமே ..... அப்படித்தான் ... காதலும் .... புரிந்து கொள்ளும் வரை தெரிந்து கொள்ளும் வரை ... அது ஒரு  மாயை ,,, அதாவது இல்லை...

நாம் நம் சொந்த உணர்வால் புரிந்து கொள்ளும் வரை .... இங்கே எல்லாம் இல்லை தான்...

ஆதலினால் காதல் செய்வீர்...



பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு உள்ளங்களுக்காக…


நீண்ட நாள்களுக்கு முன் ஒரு ப்ளாக்-ல் சுட்டடது இந்த பதிவு .... 
         
என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல, சும்மா பேச்சுக்குக் கூட ஒரு பையன வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததில்ல. எப்படித்தான் கரை ஏறப் போறாளோ? – ஒரு அம்மாவின் அங்கலாய்ப்பு.
திடும்… திடும்… திடும்…
கலாச்சாரக் காவலர்கள், கலவரப்பட்டுக் கத்தியைத் தூக்க வேண்டியதில்லை. Drop your weapons, I say!
சம்பாஷணை நடந்தது ஐரோப்பியக் கண்டத்தில், கவலைப்பட்டவரும் ஒரு ஐரோப்பியர்.
அங்கெல்லாம் பதின்ம வயது வந்ததும் பெத்தவங்க “உன் வாழ்க்கை உன் கையில்”னு நிஜமாகவே தண்ணி தெளித்து விடுகிறார்கள், அதுக்கு முறையாக சென்ட்-ஆப் பார்ட்டி கூட உண்டாம்.
ஆனா நம்மூர்ல பையனோ பொண்ணோ ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் பெத்தவங்களோட ராடார் ப்ரீக்குவன்சிக்குள்ளதான் இருந்தாகணும்.
வைரமுத்து சொன்ன மூணாம் எட்டில் எல்லாம் இங்க யாருக்கும் திருமணமே நடக்கறதில்லை. நாலாம் எட்டுலதான் பசங்க செட்டில் ஆகவே ஆரம்பிக்கிறாங்க. (இங்க “செட்டில்” ஆகறதுங்கற வார்த்தைக்கான விளக்கம் நபருக்கு நபர் வேறுபட்டாலும், சாகற வரைக்கும் நம்ம மனசு செட்டில் ஆகாதுங்கறது வேற விஷயம்.)
பொதுவா நம்ம ஊருல பெத்தவங்களாப் பாத்து நிச்சயிக்கிற திருமணம், மத சடங்குகளைத் தவிர்த்து, பெரும்பாலும் ப்ராசஸ் எல்லாம் ஒரே மாதிரியாத்தான் இருக்கும். சில வீட்டுல சீக்கிரமாப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருவாங்க, சில வீட்டுல ஒத்தப்படை, கண்டம், திருநள்ளாறுனு கொஞ்சம் லேட்டாகும்.
நம்ப ஆளுகளும் பொறுத்துப் பொறுத்துப் பாப்பாங்க. வேலைக்கு ஆகலேன்னா “அழுத புள்ளைக்குதான் பால்”னு புரிஞ்சுக்கிட்டு, வீட்டுக்கு போனப் போடும்போதெல்லாம் “இப்போதான் ரமேஷ் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன், ரவி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன்”னு ஜாடையா பிட்டப் போட்டுப் பாப்பாங்க. அசரலேன்னா, கூட்டாளி ஒருத்தனப் புடிச்சு “அப்புறம்.., இவனுக்கு எப்போ”னு மெதுவா வீட்டுல கேக்கச் சொல்லுவானுக. எதுக்கும் மசியலேன்னா கொஞ்சம் கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. பொண்ணுக கிட்ட அடிக்கடி பேசற மாதிரி ஒரு செட்-அப் பண்றது. இல்லேன்னா பொண்ணுகளோட வெளிய போற மாதிரி ஒரு பாவ்லா காட்றதுன்னு உருண்டு பொரண்டு எப்படியாவது தங்களோட கல்யாண ஆசைய வீட்டுக்குத் தெரிவிச்சிருவாங்க.
ஆனா என்னிக்காவது வீட்டுல இருந்து, “சரி உனக்குப் பாக்கலாமாப்பா”னு கேட்டா மட்டும், உடனே வெறச்சுக்குவானுக. என்னமோ இதெல்லாம் இவனுகளுக்குப் புடிக்காதுங்கற மாதிரி “ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்”னு சலிச்சுக்குவானுக.
அவங்களும் “வேற யாரையாச்சும் மனசுல வெச்சிருக்கியாப்பா”ன்னு இவன் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கும்போதுதான் கேப்பாங்க. இவன் எப்படியும் மனசுல ஒரு பத்துப் பதினஞ்சு பேர வெச்சிருப்பான். அதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரியுமா அப்படிங்கறதுதான் இங்க கேள்வியே? கடைசியா ஒரு மாதிரியா மூஞ்சிய வெச்சுக்கிட்டு ” சரி என்னமோ பண்ணுங்க போங்க” அப்படின்னுட்டு பர்மிஷன்(!) குடுத்துருவான
ஆனா “என்ன மாதிரி பொண்ணுப்பா உனக்குப் பாக்கறது?”ன்னு அவங்க கேட்டாத்தான் இருக்கு தீபாவளி.
முதல்ல எல்லாரும் முன்னுரிமை தர்றது புறத்தோற்றத்துக்குதான். இந்த விஷயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்கு “சின்ன வீடு” பாக்யராஜ் மாதிரி, சாமுத்ரிகா இலட்சணத்தோட வேலைக்குப் போகாத ஒரு பொண்ணு வேணும். சிலருக்கு வேலைக்குப் போகக்கூடிய, திறமையான மற்றும் அழகான பொண்ணு வேணும். தன்னையும் புரிஞ்சுக்கிட்டு, பத்தாததுக்குத் தன்னோட குடும்பத்தையும் புரிஞ்சுக்கணும், உயரம் அஞ்சே அரைக்கால் அடி இருக்கணும், பேசுனா பாடுனா மாதிரி இருக்கணும், பாடுனா ஆடுனா மாதிரி இருக்கணும், அப்படி, இப்பிடின்னு ஆயிரத்து எட்டரை இருக்கும்.
நம்ப பொண்ணுகளும் இதுக்கெல்லாம் சளச்சவங்க இல்லை. அவங்களுக்குப் பையன் அழகா இருக்கணும், ஆனா காதலிச்சிருக்கக் கூடாது. ஆன்-சைட்ல இருக்கணும், ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்று இருக்கணும், ஆனா மினிமம் H1B விசாவாவது வெச்சிருக்கணும். தாடி வெச்சா மாதிரி இருக்கணும், ஆனா ஷேவும் பண்ணி இருக்கணும் – அப்படிங்கற ரேஞ்சுல அவங்களும் நெறைய வெச்சிருப்பாங்க. (இத பத்தி வாலி கூடக் கொஞ்சம் விலாவாரியா சொல்லி இருக்கார்)
ஆனா ஒண்ணுங்க, இவங்கல்லாம் கேக்கறா மாதிரி எல்ல்ல்லாத் தகுதியோட இருக்கற ஒரு பொண்ணோ, பையனோ பாக்கணும்னா ஜேம்ஸ் கேமரோன் கிட்ட சொல்லித்தான் செய்யணும்.
இதுக்கெல்லாம் விதிவிலக்கா சிலபேரு “எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தத் தரும்”னு புரிஞ்சுக்கிட்டு சூர்யவம்சம் சின்ராசு மாதிரி “பெரியவங்க, நீங்களாப் பாத்து எதச் செஞ்சாலும், அத நான் ஏத்துக்கறேன்”னு கால்லேயே விழுந்திருவாங்க.
ஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் இது வாழ்க்கையோட செகண்ட்-ஆப். ஆதனால “ஆயிரத்தில் ஒருவன்” மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாங்க.
என்னதான் இத்தன நாளா பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்னு பல எடங்கள்ல இவன் பொண்ணு பாத்து இருந்தாலும் அதுக்கப்புறம்தான் ஆபீசியலா குடும்பத்தோட பொண்ணு பாக்க ஆரம்பிப்பான்.
சின்ன வயசுல, “வாடா, கல்யாணத்துக்குப் போகலாம்”னு கூப்பிட்டா, “வேற வேலை இல்லை உங்களுக்கு”ன்னுட்டு குடுகுடுன்னு கிரிக்கெட் வெளையாட ஓடிப் போயிருவான். ஆனா இப்போ , “ஏம்மா, இந்த மாசம் யாருக்கும் கல்யாணம் வைக்கலையா, ஒரு பத்திரிகைக் கூட வரலே”ன்னு கேக்கற அளவுக்கு மாறிப் போய்டுவான். ஏன்னா, எப்படிப் பாத்தாலும் எல்லாக் கல்யாணத்துலயும், இந்த மாதிரிக் குறைஞ்சது கண்ணுக்குத் தெரியாம நாலஞ்சு குரூப் பொண்ணு பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க.
ஆக “ஒரு கல்யாணத்துக்கோ, கோவிலுக்கோ போயி சைட் அடிக்கறவன் மனுஷன், குடும்பத்தோட போயி சைட் அடிக்கறவன் பெரிய மனுஷன்”ங்கறத அன்னலட்சுமி சொல்லாமேயே நாம புரிஞ்சுக்கணும்.
முதல கட்டமா “தம்பி ஒரு நல்ல போட்டோ ஒண்ணு இருந்தா எடுத்துக் குடுப்பா”ன்னு வீட்டுல கேப்பாங்க.
ஆனா அப்படி இவங்க ஒரு நாள் கேப்பாங்கன்னு சொல்லி, அந்த நல்ல போட்டோவ அவன் கடைசி ரெண்டு வருசமாத் தொடர்ச்சியா எடுத்துகிட்டுதான் இருந்திருப்பான்.
“மாப்ள, என்ன மட்டும் ஒரு சோலோ எட்றா”ன்னு எதாவது பிக்னிக் ஸ்பாட்ல யாராவது சொல்லி உங்க காதுல விழுந்தா, “சோலோ” அப்படின்னாலே ஒருத்தர மட்டும் எடுக்கறது தானே?ன்னெல்லாம் அறிவு பூர்வமா ஆராய்ச்சி பண்ணாம, அங்க ஒருத்தர் மேட்ரிமோனிக்கு ப்ரோபைல் போட்டோ எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கார்னு அவரு ஜாதகத்தப் பாக்காமயே நீங்க பட்டுன்னு சொல்லிறலாம்.
“ப்ளீஸ்டா, மறுபடியும் எட்றா, தல கலைஞ்சிரிச்சு / கண்ண மூடிட்டேன்”னு கூடவே இன்னொரு சவுண்டும் வரும் கண்டுக்காதீங்க…
கூந்தல் வனப்புக் குறைஞ்சவங்க எதிர்காத்து இல்லாத எடமா நிக்கணும், ஷாம்பூ கீம்பு போட்டு புஸ்ஸுனு வெச்சுக்கணும், தொப்பை இருக்கறவங்க மூச்ச வேற நல்லா இழுத்துப் புடிச்சுகிட்டே சிரிக்கணும்னு போஸ் குடுக்கறதும் கூட ரொம்ப ஒரு கஷ்டமான வேலதாங்க.
இந்த போடோடோவ எடுக்க மாட்றவன்தாங்க, உலகத்துலேயே பெரிய பொறுமைசாலி.
இதுல பரஸ்பரம் மாத்தி மாத்தி எடுத்துக்கறதும் உண்டு. “நான் பார் உன்ன நச்சுனு எடுத்திருக்கேன், நீ ஏன்டா இப்படி எடுத்து வெச்சிருக்கே”ன்னு அடிச்சுக்குவாங்க. இப்படி ஒருத்தருக்கு எடுக்கப்படும் சாம்பிள் சராசரியா 300ல இருந்து 500 வரைக்குமாவது இருக்கும். (டிஜிட்டல் கேமராவக் கண்டு புடிச்சவன் நல்லா இருக்கணும்) இப்படி இது வரைக்கும் உலகத்துல எடுத்த சோலோவ பிரிண்ட் போட்டு அடுக்கி வெச்சா அகிலமே அரை கிரௌண்ட் மாதிரிதான் தெரியும்.வித விதமா, ரகம் ரகமா ட்ரை பண்ணி, ட்ரை பண்ணி அரைகுறை மனசோடதான் ஒவ்வொருத்தரும் அந்த பைனல் போட்டோவப் போட்டிக்கு அனுப்பறாங்க.
சில பேரு நேர ஸ்டுடியோவுக்கு போயி, சாந்தமா முகத்துல பால் வடிய, ஒரே ஷாட்ல மேட்டர சிம்ப்ளா முடிச்சிருவாங்க.
அடுத்து பயோடேட்டா, ஜாதகத்தோட அந்த நல்ல போட்டோவையும் வெச்சு சமுதாய நதியில கலக்க விட்றுவாங்க.(ஏனைய வழிகள் – மாட்ரிமோனி சைட், மங்கள சந்திப்பு, சொந்தக்காரங்க விடு தூது இத்யாதி, இத்யாதி)
இந்தக் கால கட்டத்துல பசங்க ரொம்பக் கண்ணியமாவும், கனிவாவும், கவனமாகவும் நடந்துக்குவாங்க. அவங்க சம்பந்தமான ஆளுகளோட அப்பப்ப “என்ன பாஸ், உங்க பைல் க்ளோஸ் ஆயிடுச்சு போல? நம்புளுது ஒண்ணும் முடிவே தெரியல?”னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க. இதே கால கட்டத்துல அவங்களுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ பெரும்பாலும் ஒரு பேக் ரவுண்ட் செக்கும் நடக்கும். (“இது என்னோட நேர்மையக் கேலி பண்ற மாதிரி இருக்கு”னு சொல்லவும் முடியாது)
எப்படியும் பத்து பொண்ணு போட்டோ வருதுன்னா, இவன் ஒரு ரெண்டு பேர செலக்ட் பண்ணி, அது டேலி ஆகி மேலிடத்துக்குப் (பெத்தவங்கதாங்க) போயி, லைட்டா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கேன் ஆகி, அப்ரூவல் ஆனதும் நேர நம்ம வில்லன் இருக்காரே, அதாங்க ஜோசியரு, அவருகிட்ட பைல் மூவ் ஆகும். அவரு வேறென்ன சொல்லிடுவாரு, “ரெண்டு பொருத்தம் கூட இல்ல, மீறிப் பண்ணி வெச்சா 2012ல உலகம் அழியறதுக்கு நாம் பொறுப்பாயிடுவோம்”ங்கறா மாதிரி எதாவது சொல்லிடுவாரு.
இதே விளையாட்டு அங்க பொண்ணு வீட்டுலயும் நடக்கும். பெரும்பாலும் நம்மாள் செலக்ட் பண்ணி வெச்ச அந்தப் பத்துல ரெண்டு பொண்ணு, இவனப் பத்துல எட்டு ஆக்கி வெச்சிருக்கும். ஆக, என்னிக்கு ரெண்டு கிளியும் ஒரே சீட்ட எடுக்குதோ அன்னி வரைக்கும் இந்த விளையாட்டுத் தொடர்ந்துகிட்டே இருக்கும்.
ஒரு கட்டத்துல இந்த விளையாட்டு போர் அடிச்சுப் போயி, வெறப்பா “மணல் கயிறு” கிட்டு மணி மாதிரி இருந்தவங்க மொதல்ல கண்டிசன்ல இருக்கற AND Gate எல்லாத்தையும் OR Gateஆ மாத்திப் பாப்பாங்க, அப்புறம் நாள்பட, நாள்பட கண்டிசன்களையே ஒவ்வொண்ணாக் கழட்டிவிட்டுக்கூடப் பாப்பாங்க. கடைசில”பெட்ரோமாக்ஸ் கெடைக்கலேனா கூடப் போவுது, பந்தம் கெடச்சாக் கூடப் போதும்”னு எதார்த்தத்துக்கு எறங்கி வந்தவங்க நெறையப் பேரு. .விட்டுக் கொடுத்தலே விவாகம், காம்ப்ரமைஸ் தான் கல்யாணம் அப்படிங்கறத இங்க இருந்தே அவங்க புரிசுக்குவாங்க.
ரெண்டு குடும்பமும் பரஸ்பரம் செலக்ட் பண்ணி, ஜோசியர் சார் ஓகே பண்ணி, ஒரு நல்ல நாளாப் பார்த்து பொண்ணு பாக்க ஏற்பாடு ஆகும். பொண்ணு பாக்கப் போகும் போதே முக்காவாசி முடிவு பண்ணிட்டுத்தான் போவாங்க. அந்தக் கால்வாசிய முடிவு பண்ண ரெண்டு பேரும் தனியாப் பேசணும்னு சொல்லுவாங்க. பத்து விநாடி மௌனம், முப்பது விநாடி ஸ்டார்ட்டிங் ட்ரபுள்,கொஞ்சம் உபசரிப்பு, சில சுய தம்பட்டம், “அது தெரியுமா, இது தெரியுமா”, “இது புடிக்குமா, அது புடிக்குமா”, இடைல இடைல கொஞ்சம் வழிசல்னு ஒரு மாதிரியாப் பேசிட்டு வெளிய வந்திருவாங்க.
இதுதான் பொண்ணுன்னு உறுதி ஆயிட்டா, பிரச்னை இல்ல. இல்லேன்னா என்ன? திரும்ப மேல இருக்கற பத்தியப் படிங்க.
ஒரு வழியா பொண்ணு ஓகே ஆயிடுச்சுன்னா, பெத்தவங்க தேதி குறிக்கறாங்களோ இல்லையோ, நம்மாளு மொதல்ல போன் நம்பரக் குறிச்சிக்குவான். அப்புறமென்ன?
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…..
சில பேரெல்லாம் ரொம்ப வெவரம். போகும் போதே, ஒரு சி.யு.ஜி பேக்கேஜோடதான் பொண்ணு பாக்கவே போறாங்க. இன்னும் கொஞ்சநாள்ல செல்போன்காரங்க இதுக்குன்னு தனியா “சங்கீத ஸ்வரங்கள்”னு ஒரு ஸ்கீம் விட்டாலும் விடுவாங்க போல.
இதுல நெறைய வெரைட்டி இருக்காங்க, பேட்டரி மாத்தி, சிம் மாத்தி, போன் மாத்தித் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கறது, விடிய விடியப் பேசறது, விடிஞ்சு எந்திரிச்சுப் பேசறது. அலாரம் வெச்சுப் பேசறது, தொடர்ந்து நாப்பது மணி நேரம் பேசறதுன்னு சத்தமில்லாம நெறையப் பேரு கின்னஸ் சாதனை புரிஞ்சுகிட்டுதான் இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தீங்கன்னா நைட் ஷிப்ட்ல இருந்து வந்த எபக்ட்லதான் காலைல ஆஃபீசுக்கே வருவாங்க.
போன்ல பேசற நேரம் போக அப்பப்ப சினிமாவுக்கோ, பீச்சுக்கோ, பார்க்குக்கோ வீட்டுக்குத் தெரிஞ்சோ, தெரியாமையோ போயிட்டு வருவாங்க. எங்க காலத்துல நாங்க பாக்காததா அப்படின்னு பெரியவங்களும் கண்டுக்காத மாதிரி விட்றுவாங்க.
இந்தக் காலகட்டத்தில் அம்பிகள் கூட ரெமோவாக மாறியதையும், வீரவசனம் பேசிய பல ‘மௌனம் பேசியதே’ சூர்யாகளும் சரமாரியாகச் சரண் அடைந்ததையும் சரித்திரம் சிரிப்போடு, சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.
கல்யாண நாள் நெருங்க நெருங்க, பத்திரிகை விநியோகம், புதுத் துணி எடுக்கறதுன்னு பரபரப்பாக் காலம் ஓடிரும்.
இன்னியத் தேதிக்கு நம்ம நட்பு வட்டாரங்களுக்குப் பத்திரிகை கொடுக்கறது ஒரு பெரிய விஷயமே இல்ல. ரெண்டே நிமிஷம். இன்விடேசன ஸ்கேன் பண்ணி, “Please consider this as my personal invite”னு மெயில்ல அட்டாச் பண்ணிட்டம்னா வேலை முடிஞ்சுது. ஆனா பழைய டைரியைத் தூசு தட்டி எடுத்து, “மனம் கவர்ந்த மங்கையை மணக்கும் முன் மணவோலை அனுப்ப மறவாதே”ன்னு ஆட்டோகிராப் போட்டுக் குடுத்த எல்லாக் கல்லூரி நண்பர்களோட அட்ரஸையும் கண்டுபுடிச்சு, அவங்களுக்குப் பத்திரிகையத் தபால்லேயோ/ நேர்லேயோ குடுக்கற சொகத்தக் கொஞ்சம் கொஞ்சமா நாம இழந்துகிட்டு வர்றோம் அப்படிங்கறத யாரும் மறுக்க முடியாது.
எந்த மதத்தவங்க கல்யாணமா இருந்தாலும், கல்யாணத்துக்கு வர்ற நம்ப நண்பர்களுக்குத் தாகசாந்திக்கு வழி பண்ணலேன்னா நாம நன்றி மறந்தவங்க ஆயிருவோம். அப்புறம் எவளோ செலவு பண்ணிக் கல்யாணம் பண்ணினாலும் அதுல ஒரு புண்ணியம் இல்லாமப் போகக் கூட வாய்ப்பு உண்டு.
சரி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன?
ஒரு நீலகலர் டப்பர்வேர்ல (Tupperware) சாப்பாட்ட எடுத்துக்கிட்டு ஆபீஸ் போக வேண்டியதுதான். மறந்து விடாதீர்கள் மக்களே , கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பெருமா…..ற்றதுக்குத் தயாராகுங்கள்!

Sunday, 1 May 2011

தயிர் சாதமும் , சைவக் குருமாவும், முறுகல் தோசையும் கல்யாணமும்


                       (இந்த பதிவு கொஞ்சம் நிஜம் , நிறைய கற்பனை ) 


அறிவியல்  வளர்ச்சி சமூகத்தை சீர்படுத்துகிறதா , சீரழிக்கிறதா ..இந்த பட்டிமன்ற தலைப்புதான்  இந்த மாத தமிழ்ச் சங்க நிகழ்ச்சி ..அறிவியல் வளர்ச்சி நல்லதா ....கெட்டதா.. என்ற கேள்விக்கு " தெரியலையேப்பா "  என நாயகன் ஸ்டைலில் நடுவர் கூறி விடுவாரோ என அஞ்சினேன்...ஆனாலும் சமர்த்தாக ஒரு தீர்ப்பை கூறி அப்ளாஸ் வாங்கி கொண்டார் நடுவர்..."

சுந்தர் பட்டிமன்ற   தலைப்பை  கூறியவுடன் ,,,, அருமையான தலைப்பு .... இதை தேர்வு செய்தவருக்கு .... என் சபாஷை தெரிய படுத்தவும் என்றேன்...
" பட்டிமன்றத்தில் நீ பேசுறியா" என்றார் சுந்தர்..... நான் மௌனமாய் சிரித்து வைக்க, என் அம்மாவிற்கு பிறகு இந்த பிரபஞ்சத்திலேயே என்னை நன்கு புரிந்து அறிந்த ஒரே ஜீவன் சுந்தர் என்பதால் .. என்னை  ரொம்பவும் வற்புறுத்தவில்லை...

மழை லேசாக தூறிக்  கொண்டிருந்தது .பட்டிமன்றம் பார்க்க .. போலாமா , வேணாமா ... என பெட்டில் புரண்டு படுத்து கொண்டிருந்தேன் .. அவ்ளோ தூரம் போகணும் ,,, வரும் போது ரொம்ப குளுரும்... யோசித்து கொண்டிருக்கும் போதே , தமிழ்ச் சங்க இட்லியும் சாம்பாரும் ஞாபகத்திற்கு வந்தது,.,

எங்க ஆபீஸ் பிரமச்சாரிகளுக்கென  ஒரு விடுதி(HOSTEL ) உண்டு .. அந்த விடுதியில் ஒரு மெஸ், அந்த மெஸ்ஸில் சமையல் செய்ய  ஒரு நண்பனும்  உண்டு.... அந்த நண்பன்தான்  கடந்த நான்கு வருடங்களாக இந்த ஷங்கர் என்ற எந்திரத்தை பராமரித்து வருபவர்... அந்த நண்பனிடம் நானும் கடந்த நான்கு வருடங்களாக கேட்டு பார்த்தாகி விட்டது.... எனக்கு பிடித்த மாதிரி முறுகல் தோசையை ஒருநாளும் அவரால் சுட முடிந்ததில்லை .. இதற்கு மேலும் ஒரு கனமான தோசையை சுட முடியுமா ! என்று சவால் விடும் அளவுக்கு சுடுவான்,.,.,.அதை பார்த்தாலே நமக்கு பசிக்காது ...  ஆறு மாதங்களுக்கு முன்பு ,ரொம்பவும் வெறுத்துப்போய் அவனை நான் திட்டி விட.... அந்த தோசை விவகாரம் , அலுவலகத்தில் என் மீது "விசாரணை கமிஷன் " வைக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து விட்டது... ஒரு புறாவுக்கு போரா ! என்று நானே என்னை நொந்து கொள்ளும் அளவுக்கு ஆகி விட்டது இந்த தோசை பிரச்சினை ! 

சரி ... நானே தோசை சுட்டுக்கிறேன்னு  என்றாலும் விட மாட்டான் ,,,, அது அவன் ஏரியா-வாம் ...நான் நேரடியாக தோசை சுட்டால் அவனுக்கு கௌரவ குறைச்சல் எனவும் ... கண்டிப்பாக ஒரு நாள் எனக்கு பிடித்த முறுகல் தோசையை சுடுவேன் என்றும் .. அதற்கு கடுமையான முயற்சிகள் எடுக்க போவதாகவும் என்(?) மீது சபதம் செய்தான்...
சரி ஆறு மாதத்திற்கு முன் இந்த தோசைக்கு நான் என்ன செய்தேனாம் ! ஏன் அப்பொழுது இத்தனை பிரச்சினைகள் செய்யவில்லை ! என என்னிடம் விசாரணை கமிஷன் கேட்ட நியாயமான கேள்வியை நீங்களும் கேட்கலாம் .. 

 இந்த நிலத்திற்கு வந்த புதிதில் ,  இங்கே என்னுடைய ஆருயிர் தோசையே கிடைக்காது என கேள்வி பட்ட நான் ,,,, மனம் நொறுங்கி ... சிவபெருமானை நோக்கி கடுமையான தவத்தினை மேற்கொண்டேன்... 
தெய்வம் மனுஷ ரூபேணா  ! என்ற வாசகத்தை கேள்விபட்டிருப்பீர்கள் ... அதாவது !  தோசை மாதிரி வாழ்க்கைக்கு இன்றியமையாத விஷயங்களை வேண்டி , இறைவனை நோக்கி நீங்கள் கடும் தவம் புரியும் போது ! கடவுள் நேரடியாக 100 அடி உயரத்தில் , கதாயுதம் ,வில் அம்போடு வந்து அருள் புரிய மாட்டார்.. அதற்கு மாறாக நம்மில் (அதாவது மனித குலத்தில் ) ஒருவரை அவரது தூதுவராக நமக்கு உதவி புரிய அனுப்புவார்.. அப்படி கடந்த காலங்களில் எனக்கு கடவுள் அனுப்பிய தூதுவர்  தான் செந்தில்கணேஷ்..

நான்  எப்ப தோசை கேட்டாலும் ...அந்த கருணையே உருவான உள்ளம் இல்லை என்றே சொன்னதே கிடையாது...இந்த மாதிரியான காலகட்டங்களில் .... நான் தோசை சாப்பிட்ட வயிறு நிறைவோடும் ,,, உள்ள பூரிப்போடும் ... " உனக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கும் " என என்னையறியாமல்  ஆசீர்வாதத்தின் விளைவு,,,, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு  இல்லறம் எனும் வலையில் சிக்கி கொண்டார் அன்பர் செந்தில்கணேஷ்... அதற்கப்புறம் அவரை பார்ப்பது என்பதே அரிதாகி விட..
அப்படியே பார்த்தாலும் "அது... வந்து .... நான் ... இங்கே ...எங்கே ....அப்புறம் "  என மந்திரித்து விட்ட கோழி மாதிரி தான் பேசுவார்,... அதுவும் போக... பிறிதொரு நாளில் அவருக்கு  கல்யாணம் ஆக....மொத்தமாக எனது தோசை SOURCE நின்றே போனது.
 ( சுந்தர் ரொம்பவும் நெருங்கியவர் என்றும் சொல்லும் நீ ! ஏன் அவரிடம் உதவி கோரவில்லை என நீங்கள்  கேட்கலாம்! கல்யாணம் ஆன பாவப்பட்ட ஆத்மாக்களின் கஷ்டத்தை  நானும் அறிவேன்! ஆகையால் அவர்கள் வீடு வரை சென்று தொந்தரவு செய்வதில்லை ... ஆபீஸ்-க்கு  வரும் சமாச்சாரங்களை கபளீரம் செய்வதோடு சரி ! அதுவும் இல்லாமல் ஒருநாள் ! தனக்கு வயிறு சரியில்லை ஆகையால் காலை உணவை(தோசையை)  அலுவலகம் எடுத்து செல்கிறேன்,,, என தனது திருமதியிடம்  பொய் கூறி ,எனக்கு எடுத்து வந்த நெகிழ்ச்சியான நிகழ்வும் உண்டு... )

இந்த தோசை மேட்டர்-ஐ ரொம்பவும் நொந்து போய் சுந்தரிடம் சொல்லி கொண்டிருந்த போது !" அவர் இதுக்கெல்லாம் ஒரே முடிவு தான் இருக்கு ! அதான் கல்யாணம்"  என்று சினிமாவில் வசனம் பேசுவது மாதிரி முகத்தை சீரியஸ்-ஆக வைத்து கொண்டு சொன்னார் !  இருந்தாலும் இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ என அந்த மாதிரி அபாயகரமான முடிவில் எதுவும் நான் இறங்கவே இல்லை ! 

அதற்கப்புறம்  இந்த விஷயத்திற்கு ஒரே OUTLET தமிழ்ச் சங்கம் தான் என்றாகிவிட , முன்பு எப்பொழு இல்லாத அளவு தமிழ் மீதும் தமிழ்ச்சங்கம் மீதும் எனக்கு பாசமும் பற்றும் பீறிட்டு கொண்டு வந்தது ,,,, 

தமிழ்ச் சங்கத்தில் தோசைக்கு உத்திரவாதமோ இல்லையோ , ஆனால் அதன் சகா இட்லிக்கு உத்திரவாதம் உண்டு... இந்த சிந்தனைகள் எல்லாம் எனக்கு மொத்தமாக உத்வேகம் கொடுக்க , பெட்டிலிருந்து குதித்து எழுந்த நான் , ரோபோ ரஜினி வேகத்துக்கு குளித்து ரெடி-ஆனேன் .  

பறந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில் ,தமிழ்ச் சங்கம் ஆஜரானேன் ...  சங்க கட்டிடடம் ,,, சிரிப்பில் அதிர்ந்து கொண்டிருந்தது... இயற்கைக்கு முரணாக , ஒரு கட்டிடமே வாய் விட்டு குலுங்க குலுங்க சிரிப்பதை அங்கு கண்டு ஆச்சர்யம் அடைந்தேன் ...யார் பேசிக் கொண்டிருக்கிறார்கள் ... என யோசித்து கொண்டே உள்ளே சென்றேன் ... அங்கே ர்வாண்டா தமிழ்ச் சங்க வானில் ஒரு புது நட்சத்திரம் தக தக வென மின்னி கொண்டிருப்பதை கண்டேன்... வேறு யாருமில்லை ,,, என் சக அலுவலக நண்பர் புன்ராஜ்(customer -கள்   இப்படிதான் கூப்பிடுவார்கள் ,,, பட் அவர் பொன்ராஜ்)  பின்னி பெடலெடுத்து கொண்டிருந்தார் ...எதிர் அணி சத்யா , சாய்ராம், சரவணன் எல்லாம் ரொம்பவே காய்ந்து போய் உட்கார்ந்திருப்பதை பார்க்கும் போதே புரிந்தது .. மனிதன் சூறாவளியாய் கருத்துக்களை சுழன்று அடிக்கிறார் என்று ... ஒரு தேர்ந்தெடுத்த பட்டிமன்ற பேச்சாளர்களை மிஞ்சும் அளவும் இருந்தது அவருடைய நக்கலும் , நையாண்டியும் ... பார்வையாளர்கள் விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தார்கள்... 

" நடுவர் அவர்களே , ஆதி கால மனிதன் , இலை தழைகளை  ஆடையாக அணிந்தான் ... அறிவியல் நாகரீக வளர்ச்சி இல்லை என்றால் .... எதிர் அணியிரனும் ,பார்வையாளர்களும் .... இலை தழைகளை ஆடையாக அணிந்து வந்து ,இப்படி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்க முடியுமா !  என் கருத்தை  பெண்கள் தவறாக எடுத்து கொள்ள கூடாது என பஞ்ச வைத்து முடித்த போது ! அரங்கம் சிரித்து சிலிர்த்தது.. நடுவர் அவர்களே !எதிர் அணி சத்யா பேசும்போது ,  X -ரே எடுப்பதால் ஆயிசு குறைகிறது என்றார்... X -ரே எடுக்கவில்லை என்றால் ஆயிசே இருக்காதே ! பரவயில்லையா !  அதன் மூலம் தானே நோயிற்கான மருந்தை அளிக்க முடிவு செய்ய முடியும் ! என்று கவுன்ட்டர் அட்டாக் - கொடுத்த போது , அரங்கம் ரசித்து சிரித்தது ."..  

இரண்டு தரப்பு வாதங்களையும் நடுவர் விட அதிகமாக நான் தான் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தேன்.

 சமுதாயத்தை சீரழிக்கிறது என்ற  அணி பேசிய எந்த கருத்தும் எனக்கு ஒப்ப வில்லை. குறிப்பாக கலாச்சார சீரழிவு என்றார்கள் ... அதில் எனக்கு  கடுமையாக ஆட்சேபம் ... கலாச்சாரம் என்ற ஒன்று எங்கே இருக்கிறது அதை சீரழிக்க... கலாச்சார சீரழிவு என்று நீங்கள் குறிப்பிடும் அத்தனை விஷயமும் .இன்று திடீரென தோன்றியதல்ல, அவையெல்லாம் . கிறிஸ்து  பிறப்பதற்கு  முன்பிருந்தே இருக்கிறது.... அறிவியல் வளர்ச்சி தான் , கலாசார  சீரழிவு என்று உங்களால் சொல்லபடுகிற அத்தனையையும் மக்கள் சபையில் ஆதாரத்துடன் நிருபீக்க உதவுகிறது... உதாரணம் ஸ்ரீ ஜல் ஜல் நித்யானந்தம் ... கண்டிப்பாக இந்த விஷயத்தில் நான் Mr .நித்திக்கு என் முழு ஆதரவையும் தருகிறேன்..காரணம் அவர் யாரையும் கட்டாய படுத்தவில்லை..இருந்தாலும் சந்திக்கு வந்த அவர் விஷயம் , அறிவியல்  வளர்ச்சியின் கிளு கிளு உதாரணம் . .அப்புறம் இன்னொரு விஷயம் அது என்ன காதலில் நல்ல காதல் ! கள்ள காதல்....ஒன்றுக்கு-ஒன்று என்றால் நல்ல காதல்  ! ஒன்றுக்கு-ஒன்றுக்கு மேற்பட்ட என்றால் கள்ள காதல்  ! அப்படியா ! என்னவோ உங்க கணக்கு... சரி விஷயத்திற்கு வருவோம் ...

கடைசியாக , இந்திய சீன, பாகிஸ்தான் போர்களை நினைவு கூர்ந்து .... நடுவர் அறிவியல் வளர்ச்சி சமூகத்தை சீர்படுத்துகிறது என்ற தீர்ப்பை வாசித்தார்.. அப்புறம் என்ன சாப்பாடுதான் , என எழுந்தால் , பொதுக்குழு , சந்தா... என ஏகமாக நேரம் இழுத்தது.. .. கடைசியாக ! டின்னெர் டேபிள்-ஐ நெருங்கிய எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.... ஹ்ம்ம் .. நோ இட்லி... ஒரு வழியாக என்ன இருக்கிறது என தேடிய போது ! என்னை கவர்ந்த  இரண்டு சமாச்சாரங்கள் " தயிர் சாதமும் , சைவக் குருமாவும் ! "

சைவ குருமாவின்  வாசமும் ! தயிர் சாதத்தின் TASTE-ம் ! ஆஹா ஓஹோ ! முதல் , இரண்டு ,என மூன்றாவது ரௌன்டிற்கு டேபிள்-ஐ நெருங்கிய போது ஒரு சிறுவன் என்னை குறு குறு வன பார்த்தது என்னை ஏனோ செய்ய ! சரி இத்தோடு நிறுத்தி கொள்ளலாம் என நினைத்த போது .. வேகமாக வந்த செந்தில் கணேஷ் ! டே! உருளை கிழங்கு வறுவல் எடுத்துக்கோடா ! தயிர் சாதத்திற்கு நல்ல COMBINATION ! என சொல்லி விட்டு செல்ல எத்தனித்தவனை ! லாவகமாக நிறுத்தி!

" ஆமா இங்க இருக்கிற எல்லா சமாசாரத்தையும்  விட்டு விட்டு ஏன் நீ !  உருளைக் கிழங்கு  வறுவலுக்கு RECOMMEND செய்யுற! என்ன மாயம் என்று வினவினேன்!  காதுக்கருகில் அதை நான்தான்   செஞ்சேன் என்று கிசுகிசுத்தவன் ! நல்லாயிருக்கா! என்று ஒரு குழந்தை மாதிரி குதுகலித்து கேட்டான்..

அப்பொழுதான் கவனித்தேன் ! அவன் தலையில் புடைத்து இருந்தது .. டே இதென்னடா ஒனிடா பூதம் மாதிரி ! என்றேன்..... அதை ஏன்டா கேட்கிற ! என்று என்னை வெளியில் தனியே தள்ளி கொண்டு வந்தவன் 
" ரெண்டு நாள் முன்னாடி சாம்பார் வைக்கும்போது ! IPL மேட்ச் பார்க்குற interest -ல , சாம்பார்ல உப்பை கொஞ்சம் கம்மியா போட்டுட்டேன் ..." 
எங்க வீட்டம்மாவுக்கு சாப்பாடு பரிமாறிக்கிட்டு  இருக்கும் போது ! அதை அவங்க கண்டுபுடுச்சி  கோவத்துல சாம்பார் கரண்டியாலேயே மண்டையில அடிச்சுட்டாங்க! அதான் என்றான் ! 
என்னடா ஒரு உப்பு கம்மியா போட்டதுக்கே இவ்ளோ பெரிய தண்டைனையா என்றேன் ! ரொம்ப பாவமாக இருந்தது !

அப்பொழுது தான் ! எனக்கு ஞபாகம் வந்தது... நேத்து சுந்தர் வீட்டுக்கு போயிருந்த போது ...அவர் கூட மடித்து கட்டின கைலி ! முண்டா  பனியன் , இடது கையில் ஒரு துண்டு , வலது கையில் சாம்பார் கரண்டி , முகத்தில் வியர்வை + கரி என பரிதாபமாக சமையல் கட்டில் இருந்து வெளியே வந்தார்... என்னுடன் ஒரு ஐந்து  நிமிடம்தான் பேசியிருப்பார் !
" என்ன குழம்பு ஆயிருச்சா " என தடிமன் ஆன ஒரு அதட்டல் உள் ரூமில் இருந்து வர! இதோ பத்து  நிமிஷம் என ஓடியவர் ! கொஞ்சம் நேரம் கழித்து திரும்பி வந்து ! கொஞ்சம் இரு இந்த அப்பளம் மட்டும் பொறிச்சிட்டு   வந்திடுறேன் என்றார்.. 
கல்யாணத்திற்கு அப்புறம்  மிகபெரிய  மாற்றம் வரும் என்கிறார்கள் அது இதுதானா !  என யோசித்து கொண்டிருக்கும் போது ! என் சிந்தனையை கலைத்த  செந்தில் கணேஷ்!
" ஷங்கர் ! நீ பாட்டுக்கு ரொம்ப அசால்ட்டா கல்யாணத்துக்கு அப்புறம் சமைக்க கத்துக்கலாம்னு இருக்காதே ! இப்பவே ஒரு stove   வாங்கி ட்ரைனிங் எடுக்க ஆரம்பிச்சுடு ! ஏன்னா நீ என்ன மாதிரி அடி தாங்க மாட்டே! " என்றான் ...

செந்திலின் என் மீதான கரிசனம் புரிந்தது...  மனதில் கிலியும் ! அதை தொடர்ந்து வயிற்றில் புளியும் கரைக்க ! முறுகல் தோசையும் கல்யாணமும்  என் கண் முன்னே மாறி மாறி பிளாஷ் அடிக்க ...........
கல்யாணம் என்ற ஒன்று அவசியம் தானா ! என் ஆசையான முறுவல் தோசை வெறும் கனவாக போய் விடுமா !  என்ற நீண்ட சிந்தனையுடன் பெருமூச்சோடும் வீடு நோக்கி பயணிக்க ஆரம்பித்திருந்தேன்...