Monday, 14 February 2011

பொங்கல் இன் ர்வாண்டா

இந்த முறை பொங்கல் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது... ர்வாண்டா தமிழ்ச்  சங்கத்தின் சார்பாக......
எனக்கு ர்வாண்டாவில் இது 4 வது பொங்கல்..

இந்த அளவுக்கு  மெனக்கெடல் .... இதற்கு முன் இருந்ததில்லை.....நிகழ்ச்சி திட்டமிட்டவர்களுக்கும் ஒருங்கிணைத்தவர்களுக்கும் .நன்றிகள் பல...
வாசலில் வாழைமரம்.. அரிசி மாவில் கோலம் .... பொங்கல் சிறப்பான காவி பொடி... மேடையில் இருபுறமும் கரும்பு....என பட்டய கிளப்பி இருந்தார்கள்...

எல்லோரும் கலாச்சார உடையான வேஷ்டி சட்டை ,, புடவையில் வந்திருந்தார்கள்...

விழாவின் ஹைலைட் மதிப்பிற்குரிய திருமதி.பார்வதி அம்மாள்....அட்டகாசமான குரலெடுத்து அவர் செந்தமிழ் நாடெனும் போதினிலே...
பாடிய போது... அனைவரும் மெய்சிலிர்த்து ரசித்தனர்...

ரெண்டாவது ஹைலைட் வாழை இலையில் பொங்கல் விருந்து... கலக்கி விட்டார்கள்... வடை பாயசம் சாம்பார் அப்பளம் என ஏக போகம்..

பொங்கல பொங்கல வச்சி ..... பாடல் அருமை...

தமிழ் வரலாறு ...வீடியோ-ல்  ஒளிபரப்பட்டது...

குட்டீஸின் வந்தேண்டா பால்காரன் நடனம் குதுகலமாக இருந்தது...

காணும் பொங்கல் சிறப்பான கும்மி பாடினார்கள்.... கிராமிய பாடல்கள் ஒலிபரப்ப பட்டது..

மொத்தத்தில் .... இந்த முறை நான் பொங்கலை மிஸ் பண்ண வில்லை என்று தான் சொல்ல வேண்டும்...


No comments:

Post a Comment